எங்களுக்கு 1000 ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படக்கூடிய மாதாந்திர உதவித்தொகை ஒரு மனிதன் தன்னை பராமரித்துக் கொள்வது என்பது நடைமுறைக்கு இயலாதது அதனால் எங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தித்தர வேண்டும் என்று எமது இயக்கம் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது.
அக்கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாததால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி தரக்கோரி மனு அளிக்கிறோம் என்று கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் ச.சக்திவேல் மற்றும் ஒளிப்பதிவாளர். பி. சிலம்பரசன்.

No comments:
Post a Comment