நம்பியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 December 2022

நம்பியூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!.


ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம் நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர் வட்டார தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

வரவேற்புரையாக ராமலிங்கம் துணைத் தலைவர் TNGEA விளக்கவுரை கருப்புசாமி செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வாழ்த்துரை ராதாமணி மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கம், சுரேந்தர் வருவாய்த்துறை, ராஜாமணி வருவாய் துறை, ராமலிங்கம் நூலகத்துறை மற்றும் சிறப்புரையாக பெருமாள் மாவட்ட இணை செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 115 ரத்து செய்யகோரியும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கலைந்து உரிய காப்பீட்டு தொகையை வழங்கிடவேண்டும், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துபழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட தவறும் பட்சத்தில் பட்ஜெட்கூட்டத்தொடரின் போது சட்டமன்றத்தை முற்றுகையிடுவதென சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது, ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக நன்றியுரை ரஹமத்துல்லா மாவட்ட துணைத்தலைவர் பேரூராட்சி ஊழியர் சங்கம். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment