ஈரோட்டில் மாவீரன் குணாளன் நாடார் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க அமைச்சர் முத்துசாமி இடம் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் , தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் மாநில , மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளுடன் வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமியை நேரில் சந்தித்து கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடார் அவருடைய சிலை நிறுவுதல்,மணிமண்டபம் அமைத்தல் மற்றும் சங்கத்தின் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி சம்பந்தமாக கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் கவின் சங்கர் , மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம் .கே .டி கோவிந்தசாமி , மாநில தகவல் தொழில்நுட்ப அணி கௌரிசங்கர் , கலைவாணன் , கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி , திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரகுபதி , ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் , ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் , மாவட்டத் துணைத் தலைவர் அர்ஜுனன் , சென்னிமலை ஒன்றிய துணைத் தலைவர் பெஸ்ட் சிவகுமார் , ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தசாமி , சுந்தரம் , ரஞ்சித் , மாவட்ட தகவல் தொழில் பணி சக்திவேல் , பெருந்துறை ஒன்றிய தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment