அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் சான்றிதழ்களை வழங்கினார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 2 February 2024

அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் சான்றிதழ்களை வழங்கினார்.


அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் சான்றிதழ்களை வழங்கினார்.


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற  புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1000  பெறப்பட்டு வரும் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் விழாவில் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் புதுமைப்பெண் திட்டச் சான்றிதழ்களை மாணவிகளுக்கு வழங்கி   விழா பேரூரை ஆற்றினார்.அதனை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்  



தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு குடும்ப சூழ்நிலையின் காரணமாக பெண்களின் உயர்கல்வி தடைபடக் கூடாது என்பதுடன் கல்வி கட்டணம் போக்குவரத்து கட்டணம் நல்ல உணவு மற்றும் கல்லூரி படிப்பிற்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிடும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ஊக்கத்தொகையை  உங்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது நீங்கள் ஏற்கனவே வேறு கல்வி உதவித் தொகையோ பிற சலுகைகளையோ பெரும்பவராயினும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்படலாம் என்பதே திட்டத்தின் சிறப்பம்சம் என கூறினார். உடன் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி , போக்குவரத்து துறை காவல் துறை உதவி ஆய்வாளர்  சண்முகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அந்தியூர் கிளை மேலாளர் ரமேஷ்,அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், அந்தியூர் பேரூர் செயலாளர்  காளிதாஸ் , பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி ,அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், பேரூர் கழக துணை செயலாளர்  பாப்பாத்தி , பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்  யாஸ்மின்தாஜ்  , கவிதா சேகர்,வேங்கையன்,கீதா,கௌரி , ஈஸ்வரமூர்த்தி பொண்ணு பையன்,  பத்மநாபன், வார்டு  செயலாளர்கள் முத்து ரவி துரைசாமி  , மகளிர் அணி செல்வி பச்சமுத்து  வழக்கறிஞர் ஜாகீர் ,  செல்வன் காவேரி பழனிச்சாமி, ஜீவானந்தம், வைஸ்சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



 தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக பூபாலன்

No comments:

Post a Comment