முன்னாள் அமைச்சர் நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 May 2024

முன்னாள் அமைச்சர் நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார்.

 



ஈரோடு மாநகர் மாவட்டம் , மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளாம்பரப்பு நால்ரோட்டில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற‌ இணைச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான V.P சிவசுப்பிரமணி  தலைமையில் மொடக்குறிச்சி அஇஅதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர்  மயில் (எ) சுப்பிரமணி யின் ஏற்பாட்டில் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர்,  முன்னாள் அமைச்சர்  K V இராமலிங்கம் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.


 இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment