நம்பகத்தன்மை இல்லாத நீட் தேர்வு தேவையா ? எம் . யுவராஜா கேள்வி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 12 June 2024

நம்பகத்தன்மை இல்லாத நீட் தேர்வு தேவையா ? எம் . யுவராஜா கேள்வி :


நம்பகத்தன்மை இல்லாத நீட் தேர்வு தேவையா ? எம் . யுவராஜா கேள்வி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் எம் . யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : - 


நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது . இதில் 67 மாணவர்கள் முதல் மதிப்பபெண் பெற்று உள் ளனர் . அரியானா மாநிலத்தில் ஒரே மையத் தில் படித்த 6 மாணவர்கள் 720 - க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் . இது தொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் எதி ரொலித்து வருகிறது . நாட்டில் சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன . ஆனால் 13 லட்சத்து 16 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது . நீட் தேர்வை பொறுத்தவரை அதன் முடிவுகளை பார்க்கும்போது முறைகேடுகள் நடந்து உள்ளது உறு தியாக தெரிகிறது . உயிர்காக்கும் உன்னத சேவையான மருத்துவ பணிக்கு தகுதியானவர்கள் வரவேண்டும் என்பதில் மாற்றுக்க ருத்து இல்லை . ஆனால் அந்த தகுதியை நிர்ணயம் செய்யும் தகுதித்தேர்வு தகுதியாக நடத்தப்படுகிறதா ? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது . சமீபத்தில் நடந்துள்ள நிகழ்வுகள் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையை முழுமையாக இழக்கவைத்துள்ளது . நம்பகத்தன்மை இல்லாத நீட் தேர்வு தேவையா ?. தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு தேவை இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு. 

No comments:

Post a Comment