நெற்றியில் துணியை வைத்து தையல் போட்ட டாக்டர்கள் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

நெற்றியில் துணியை வைத்து தையல் போட்ட டாக்டர்கள் :



ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் பூபதி . இவர் கடந்த 1 - ம் தேதி வேலை நிமிர்த்தமாக தனது இருசக்கர வாகனத்தில் , இடையன்காட்டுவலசு சாலையில் சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக , நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அப்பகுதி மக்கள் பூபதியை மீட்டு , அதே பகுதியில் செயல்படக்டு வரும் மீனாபசுபதி பிளாஸ்டிக் சர்ஜரி க்ளீனிக் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .



 அங்கு பூபதியை பரிசோதித்த மருத்துவர்கள் காயமடைந்த இடத்தில் தையல் போடவேண்டும் என பூபதியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது . இதனையடுத்து மருத்துவ சிகிச்சை நடைபெற்றதை அடுத்து , வீட்டிற்கு வந்த பூபதிக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது . இதனால் சந்தேகமடைந்த பூபதி , ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார் . அப்போது , தையல் போடப்பட்ட இடத்தை அரசு மருத்துவர்கள் சோதனை செய்த போது , காயமடைந்த இடத்தில் சிறிய துணி வைத்து தையல் போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் . இதுகுறித்து கார் ஓட்டுநர் பூபதியிடம் தகவல் தெரிவித்ததோடு , மறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து , அறுவை சிகிச்சைக்கு தயாராகி வரும் பூபதி , சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment