மனவளக்கலை மன்றம் சார்பில் யோகா வகுப்புகள் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

மனவளக்கலை மன்றம் சார்பில் யோகா வகுப்புகள் :



ஜூன் 10 ல் தொடக்கம் மனவளக்கலை மன்றம் சார்பில் யோகா வகுப்புகள் ஜூன் 10 இல் தொடக்கம் ஈரோட்டில் மனவளக்கலை மன்றம் சார்பில் யோகா வகுப்புகள் வரும் 10 - ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து ஈரோடு மனவளக்கலை மன்ற நிர் வாக அலுவலர் வெங்கடேஷ் வெளியிட்ட செய் திக் குறிப்பு : ஈரோடு , பெரியார் நகரில் இயங்கி வரும் மனவளக்கலை மன்றம் அறிவுத் திருக்கோயிலில் புதிய யோகா வகுப்புகள் வரும் 10 - ஆம் தேதி தொடங்கவுள்ளன . வரும் 10 - ஆம் தேதி முதல் 24- ஆம் தேதிவரை காலை 7 மணி முதல் 8. 30 மணி வரை ஒரு வகுப்பு நடைபெற உள்ளது . 


பெண்களுக்காக பகல் 10 . 30 மணி முதல் 12.30 மணி வரை ஒரு வகுப்பு நடை பெற உள்ளது . 17 - ஆம் தேதி முதல் ஜூலை 1- ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை மற்றொரு வகுப்பு நடைபெற உள்ளது . இவ்வகுப்புகளில் எளியமுறை தியானப் பயிற் சிகள் , உடல் பயிற்சிகள் , யோகா , காயகல்ப பயிற்சி மற்றும் சூரியநமஸ்காரம் ஆகியவை கற் றுத்தரப்பட உள்ளன . 14 வயதுக்கு மேற்பட்ட ஆண் , பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம் . மேலும் , பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தும் இளநிலை , முதுநிலை பட்டப் படிப்பு வகுப்புகளும் தொடங்க உள்ளன . விருப்பம் உள் ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது . 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment