ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான சாலை மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் , போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் , ஆணையாளர் மனிஷ் தலைமையில் நேற்று ( செப் .18 ) ஆலோசனைக் கூட்டம் நடந்தது . மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் , வருகிற நாளை முதல் ( வெள்ளிக்கிழமை ) மீனாட்சி சுந்தரனார் சாலை ( ஜி.ஹெச் ரவுண்டானா முதல் பி.எஸ் . பார்க் வரை ) , பி.எஸ் . பார்க் முதல் மணிக்கூண்டு , எல்லை மாரியம்மன் கோவில் வரை , ஸ்வாஸ்திக் கார்னர் முதல் வீரப்பன்சத்திரம் வரை , ஈ.வி.என் ரோடு ( ஜி.ஹெச் ரவுண்டானா முதல் ரயில்வே ஸ்டேஷன் , காளைமாடு சிலை வரை ) ஆர் . கே . வி ரோடு , சத்தி ரோடு ஆகிய பிரதான சாலைகளில் தற்போதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது . பிரதான சாலைகளின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு , அதற்கென மாநகராட்சி இடத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது . அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி , மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட முக்கிய தெருக்கள் முழுவதும் வாகனங்கள் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதற்காக , மாவட்ட கலெக்டர் ஒப்புதல் பெற்று செயல்முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment