ஈரோட்டில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 September 2024

ஈரோட்டில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு :


ஈரோட்டில் பழுதடைந்த குடிநீர் குழாயை மாற்றி , புதிய குழாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பொருத்தினர் . ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் , கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக பதிக்கப்பட்ட பெரும்பாலான குடிநீர் குழாய்களில் , ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு , குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது . மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் அழுத்தம் ஏற்பட்டு , பழைய குழாய்கள் , ஆங்காங்கே பழுதடைந்து வருகிறது . இதனால் , முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது . இந்நிலையில் , பழுதடைந்த குழாய்களை கண்டறிந்து அதற்கு பதிலாக புதிய குழாய்களை , மாநகராட்சி அதிகாரிகள் பொருத்தி வருகின்றனர் . அதன்படி , ஈரோடு மாநகராட்சி 28 வது வார்டுக்கு உட்பட்ட முனிசிபல் காலனியில் , பழுதடைந்த பழைய குழாய்க்கு பதிலாக புதிய குழாய்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ( செப் .19 ) பொருத்தினர் . இதனிடையே , மாணிக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் , குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment