ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா சலங்கபாளையம் பேரூராட்சி 15வது வார்டில் குடிநீர் தொட்டி புதிதாக அமைக்க பூமி பூஜை நடைபெற்றது, சலங்கபாளையம் பேரூராட்சியில் 15வது வார்டுக்குட்பட்ட ஈரோடு மெயின் ரோடு பகுதியில் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க சலங்கபாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி மணிமேகலை பழனிச்சாமி அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
இந்த பூமி பூஜையில் இரண்டாவது வார்டு உறுப்பினர் சீனிவாசன், நாலாவது வார்டு உறுப்பினர் தனசேகரன் 5-ஆவது வார்டு உறுப்பினர் ராஜா ஆறாவது வார்டு உறுப்பினர் ரவி, 11வது வார்டு உறுப்பினர் வெள்ளியங்கிரி, 15 வது வார்டு உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர்கள் எஸ். எஸ். சௌந்தரராஜன், கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment