ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடத்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் தலைமை தாங்கினார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவரும், கோபி நகர செயலாளர் என் ஆர் நாகராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார் சத்தியமங்கலம் நகர மன்ற தலைவரும் சத்தியமங்கலம் நகர கழக பொறுப்பாளர் திருமதி ஆர். ஜானகி இராமசாமி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
விழாவில் கோபிசெட்டிபாளையம் ஒன்றிய கழக செயலாளர் எஸ் ஏ முருகன், கோபி சிந்து ரவிச்சந்திரன் அவர்கள் பவானிசாகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ. சுப்பிரமணியம் அவர்கள் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஐ. ஏ.தேவராஜ் அவர்கள் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகர திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், கோபிசெட்டிபாளையம் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மாணவர்களும், மாணவியர்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


No comments:
Post a Comment