அந்தியூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

அந்தியூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதலமைச்சருமான  மு. க. ஸ்டாலின்  தலைமையிலான அரசின் ஓராண்டு கால சாதனை விளக்க  பொதுக்கூட்டம் அந்தியூர் தேரடி திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரும், அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி. வெங்கடாசலம்  தலைமை தாங்கினார்.

அந்தியூர் பேரூராட்சி தலைவர் எம். பாண்டியம்மாள் மாதேஸ்வரன்  வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். சரவணன், டி என் பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் எம். சிவபாலன், கோபி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கே. எஸ். ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி,  திமுக  துணை பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினர்  அந்தியூர். ப. செல்வராஜ்,  தமிழக சட்டமன்ற கொறடாவும், மாநில மாணவரணி இணை செயலாளர் கே.வி. செழியன், ரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், தலைமை கழக பேச்சாளர்கள் நாகை நாகராஜன், நாமக்கல் ராஜகோபால் ஆகியோர் கலந்துகொண்டு ஓராண்டு சாதனை பற்றி சிறப்புரையாற்றினார்கள்.


மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி. கே. சுப்பிரமணி ,கே.ஆர். கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எம். செந்தில்நாதன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் கோபி சிந்து ரவிச்சந்திரன் மற்றும் சார்பு அணியினர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தின் முடிவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் என்.கே. செபஸ்தியான் நன்றியுரையாற்றினார். 

No comments:

Post a Comment