சத்தியமங்கலத்தில் கேரளா லாட்டரி விற்றவர் கைது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 May 2022

சத்தியமங்கலத்தில் கேரளா லாட்டரி விற்றவர் கைது.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் . சத்தியமங்கலம் வடக்கு பகுதியில் சட்டவிரோதமாக தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பூபதி என்பவர் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். 

அதன் பேரில், சத்தியமங்கலம் வடக்கு பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த விஜயகுமார் ( 47 ) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது. அவர் சட்டவிரோதமாக கேரள லாட்டரி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 350 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ 8190 பறிமுதல் செய்தனர்.


- ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment