ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயில் 108 மகளிர் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை 2022-23ல் அறிவித்தப்படி, 12 திருக்கோயில்களில் 108 மகளிர்கள் பங்குபெறும் பவுர்ணமி திருநாளில் விளக்குபூஜை நடத்தப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயிலில்
108 மகளிர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையை ஈரோடு வடக்கு திமுக மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. பண்ணாரி மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், திமுக நகர செயலாளர் ஜானகிராமசாமி, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் ஜ.ஏ.தேவராஜ், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ மற்றும் இந்து அறநிலை துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment