கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 June 2022

கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நகர திமுக மற்றும் சத்தி நகர திமுக இளைஞரணி சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.


இந்த முகாமை ஈரோடு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்து இலவச மரக்கன்றுகளையும்,‌ பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி நகர திமுக பொறுப்பாளர் திருமதி ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். 


மேலும் முகாமில் சத்தியமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் ஆர். நடராஜ், நகர பொதுக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கே எம் எஸ் முருகன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 3-ஆவது வார்டு உறுப்பினர் சாவித்திரி, நாலாவது வார்டு உறுப்பினர் நாகராஜ், ஆறாவது வார்டு உறுப்பினர் நந்தினி, 7-வது வார்டு உறுப்பினர் தேவி, ஒன்பதாவது வார்டு உறுப்பினர் புஷ்ப வள்ளி முருகன், 10வது வார்டு உறுப்பினர் வேலுச்சாமி, 11வது வார்டு உறுப்பினர் சரவணன், 12வது வார்டு உறுப்பினர் குர்ஷித், 15-ஆவது வார்டு உறுப்பினர் ஹிதாதுன்னிசா , 16-ஆவது வார்டு உறுப்பினர் சவுதாம்மா, 17வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி, ‌ 19வது வார்டு உறுப்பினர் லட்சுமி, ‌ 21வது வார்டு உறுப்பினர் பேபி, ‌ 24வது வார்டு உறுப்பினர் நாகராஜ், ‌ 25வது வார்டு உறுப்பினர் செல்வி, சத்தி நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீராம் வேலுச்சாமி, ‌ மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நசீர் மற்றும் நகர துணை அமைப்பாளர்கள் குரு ரவிச்சந்திரன் , ஆசிக் அலி,‌ யுவராஜ்,‌ இளைஞர் அணி எஸ் .பூபதி,‌ நகர மாணவரணி அமைப்பாளர் சுரேஷ்,‌‌ திமுக இளைஞர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment