சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கிட கோரி மாநாடு அறிவிப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 June 2022

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கிட கோரி மாநாடு அறிவிப்பு.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற்றிட கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் மற்றும் புதிய திராவிட கழகம்  சார்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும்  கொங்கு தளபதி என்று அன்போடு அழைக்கின்ற திரு.K.S.ராஜ்கவுண்டர் அவர்கள் தலைமையில், வேட்டுவக்கவுண்டர் சமுதாயம் உட்பட மேலும் பல மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றினைத்து  சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பல்வேறு ஞாயமான சமுதாய கோரிக்கைகளை உள்ளடக்கிய  மாநாடு வருகிற 7/8/2022 அன்று  மதுரையில் மாபெரும் புரட்சி மாநாடாக அறிவித்துள்ளார்கள். 

மேலும் மேற்கன்ட மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் சிறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி வட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி பகுதியில் மாநாட்டு ஆலோசனை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பு தி க பவானி ஒன்றிய செயலாளர் திரு.கார்.சௌந்தர்ராஜன் அவர்கள் தலைமைதாங்கினார். மாவட்ட தலைவர் திரு.கனேசன் மற்றும் பெருந்துறை ஒன்றிய செயலாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் துவக்க உரையாற்றினார்கள், மாவட்ட செயளாலர் திரு.மகேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். 


சிறப்பு அழைப்பாளர் புதிக நிறுவனர், மாநில தலைவர் திரு.K.S.ராஜ்கவுண்டர் அவர்கள் மாநாட்டு அழைப்பிதழை வழங்கி சிறப்புரையாற்றினார்கள் மற்றும் கிளை கழக பொறுப்பாளர்கள், தொன்டர்கள், பொதுமக்கள் பலர் சிறப்பாக கலந்து கொண்டார்கள் விழா முடிவில் பெருந்துறை ஒன்றிய செய்தி தொடர்பு பிரிவு செயளாலர் திரு.கைலாசம் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment