ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் எண்ணமங்களம் ஊராட்சியில் எண்ணமங்களம் காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மயானத்தில் இறைச்சி மற்றும் விலங்குகளின் கழிவுகளை கொட்டி உள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.மேலும் இறந்தவர்களின் உடல்கள் புதைக்க மிக சிரமம் ஏற்படுகிறது. இதை கேள்வி பட்டவுடன் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மயில் கந்தசாமி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
உடனடியாக கழிவுகளை அகற்ற வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:
Post a Comment