குடிநீர் தொட்டி கட்ட ரூ.1 கோடி மதிப்பு நிலம் தானம் வழங்கிய குடும்பம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

குடிநீர் தொட்டி கட்ட ரூ.1 கோடி மதிப்பு நிலம் தானம் வழங்கிய குடும்பம்

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 17 வது வார்டில் அப்பகுதி பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோ கம் செய்ய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டநிலம் தேவைப்பட்டது. நன்கொடையாளர்கள் நகராட்சிக்கு தானமாக நிலம் வழங்குமாறு புஞ்சை புளியம்பட்டி நகர திமுக  செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.ஏ.  சிதம்பரம், 14வது  வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமி ஆகியோர் கோரிக்கை விடுத்து முயற்சி மேற்கொண்டனர். இவர்கள் முயற்சியின் பேரில்  அப்பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள், தெய்வசிகாமணி, ரேவதி ஆகியோர் தங்களுக்கு சொந்த மான ரூ.1 கோடி சந்தை மதிப்புள்ள 10.25 சென்ட் நிலத்தை நகராட்சிக்கு  தானமாக வழங்க ஒப்புக்  கொண்டனர்.


புஞ்சை புளியம்பட்டி  சார் பதிவாளர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் பெயரில் நிலதான பத்திரம் பதிவு செய்யப்  பட்டது. சார் பதிவாளர்  அலுவலகத்தில் இருந்து  நிலம் வழங்கியதற்கான தான பத்திரம் வழங்கப்  பட்டதை தொடர்ந்து  கண்ணம்மாள், தெய்வசிகாமணி, ரேவதி ஆகியோர் நகராட்சி அலுவலகத்திற்கு  சென்று நகராட்சி தலைவர்  ஜனார்த்தனள், துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், கமிஷனர் சக்திவேல் ஆகி யோரிடம் நிலம் தானம் செய்ததற்கான பத்திரத்தை ஒப்படைத்தனர்.


பத்திரத்தை பெற்நுக் கொண்ட நகராட்சி துணைத் தலைவர் சிதம்பரம், மக்கள் பயன்பாட் டுக்கு குடிநீர் தொட்டி கட்ட தங்களது நிலத்தை, தானமாக வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்கு பொன்னாடை அணி வித்து கவுரவித்தார். இந்நிகழ்வின்போது நகராட்சி பொறியாளர் கதிர்வேல் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.  


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162481 

No comments:

Post a Comment