ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காங்கிரீட் தளம், வடிகால், மேல்நிலை தொட்டி பணிகள் துவக்கம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காங்கிரீட் தளம், வடிகால், மேல்நிலை தொட்டி பணிகள் துவக்கம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் குத்தியாலத்தூர் ஊராட்சி பசுவானபுரம் எஸ்சி காலனியில் ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் 2021- 2022 கீழ் 62 லட்சம் மதிப்பில் காங்கிரீட் தளம், வடிகால், மேல்நிலை தொட்டி ஆகிய பணிகளை செய்வதற்கான பூமி பூஜை போடப்பட்டது. 


சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும் சத்தி  திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான கே. சி. பி. இளங்கோ, சத்தி திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஐ. ஏ. தேவராஜ்  கலந்துகொண்டு சிறப்பித்தனர். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ)  பிரேம்குமார், உதவி பொறியாளர்   ஜெயகாந்தன் மற்றும்  திமுக நிர்வாகிகள் சேகர், நஞ்சு ராஜ்,கோவிந்தராஜ், குருசாமி,வேலுமணி, சின்னராஜ், ராமசாமி, அண்ணாதுரை, மகேஷ், துரைசாமி, அசோகன், மணி  மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர்  சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471 

No comments:

Post a Comment