ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா (03/07/2022) சர்ச்சை பேச்சு மற்றும் பாதிரியார் திரு. ஜெகத் கஸ்பர் ராஜ் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை கண்டித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.அரவிந் சாகர்.கோ தலைமையில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள். மற்றும் அனைவருடனும் சேர்ந்து புகார் மனு மற்றும் உரிய வீடியோ ஆவணங்கள் அளிக்கப்பட்டது.
புகாரை, பெற்றுக்கொண்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர் அவர்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜனகரத்தினம் ஜி,தினேஷ்குமார், ஜி,முருகையன் ஜி,ரகுநந்தன் ஜி,பாலமுருகன் ஜி,கவின், சசிகுமார்,குப்புராஜ்,பிரவீன், ரகுசூர்யா, சுதாகர், பவித்ரன், நவீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471
No comments:
Post a Comment