வரும் 17/09/22 சனிக்கிழமை அன்று பகுத்தறிவு பாவலன் மண்ணின் மைந்தர் தந்தை பெரியார் அவர்களின் 144 - ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு அரசு மருத்துவமனை (GH) முதல் பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கல சிலை உள்ளது.
தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கல சிலைக்கு பல்வேறு கட்சிகள், அமைப்பு, இயக்க, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெரியார் உணவாளர்கள், பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என்று 09/09/22 வெள்ளிகிழமையற்று பெரியார் மன்றத்தில் சுமார் 30-மேற்பட்ட அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் உடன் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் K.சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment