ஆதித்தமிழர் பேரவை சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

ஆதித்தமிழர் பேரவை சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா.

ஈரோடு  மாவட்டம், ஆதித்தமிழர் பேரவை  சார்பில் அறிவுலக ஆசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்த நாளில் சத்தியமங்கலம் புது வடவள்ளி அருகில் உள்ள சமத்துவபுரத்தில் அய்யா பெரியார் அவர்களின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நிமித்தம் செய்யப்பட்டது, அப்போது முழக்கம் இடப்பட்டது.


தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணிலே வாழ்ந்த காலங்களில் ஆரியர்கள் தலை தூக்க பயந்தார்கள் இன்று இந்த நாட்டில் ஆரியர்கள் தலை தூக்கி பாசிசத்தை இந்த மண்ணில் காலூன்ற துடிக்கிறார்கள் ஆயர்களை வேர் அறுப்போம் திராவிட மாடல் ஆட்சியை தூக்கி பிடிப்போம், என்று முழங்கப்பட்டது.


தலைமை   மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி, முன்னிலை  மாவட்ட  தொ.பேரவை அணி செயலாளர் கி.செல்வன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொ.குமுதா, மாவட்ட  மகளிர் அணி தலைவர் செ.சித்ரா, மாவட்ட மகளிர் அணி நிதி செயலாளர் ரா.புவனேஸ்வரி, பவானிசாகர் தொகுதி செயலாளர் த.ராஜசேகர் மற்றும் பெ.நித்யா, ரா.அமுதா, ம.மகேஸ்வரி, கு.மல்லிகா, அ.நந்தினி, மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment