சாக்கடைகளை தூர்வாருதல் மற்றும் நிரந்தர மேம்படுத்தப்பட்ட வடிகால் வசதிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 September 2022

சாக்கடைகளை தூர்வாருதல் மற்றும் நிரந்தர மேம்படுத்தப்பட்ட வடிகால் வசதிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

ஈரோட்டில்  மழை காலங்களில்  காரணமாக  மாநகரின் முக்கிய பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பொது மக்கள் அவதி - சாக்கடைகளை தூர்வாருதல் மற்றும்  நிரந்தர மேம்படுத்தப்பட்ட வடிகால் வசதிகளை தொலைநோக்குப் பார்வையுடன் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும், SDPI கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.


ஈரோடு தெற்கு மாவட்ட SDPI-கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்:-

  1. தமிழகம் முழுவதும் பருவமழை துவங்கியுள்ளதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகரில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரின் முக்கிய சாலைகளான காவிரி ரோடு, ஆர்.கே.வி ரோடு, மணிக்கூண்டு, பிரப் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் பொழுது வெள்ளம் பெருக்கெடுத்து பல மணி நேரம் வடியாமல் இருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் மாநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ஆகவே இதனை சரி செய்யும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சாக்கடைகளை தூர்வாருதல் மற்றும் நிரந்தரமான மேம்படுத்தப்பட்ட வடிகால் வசதிகளை தொலைநோக்கு பார்வையுடன் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
  2. அடிமைத்தனத்தை ஏற்க மறுப்போம்! என்ற மாபெரும் வெகுஜன பிரச்சார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி தேசம் முழுவதும் முன்னெடுக்கின்றது. மக்களை வஞ்சிக்கும் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக வருகின்ற 2022 டிசம்பர் மாதம் வரை நடைபெறக்கூடிய இந்த பிரச்சார இயக்கத்தை ஈரோடு மாவட்டம் முழுவதும் முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
  3. எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வருகின்ற செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 10 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. அதனை வலுப்படுத்தும் விதமாக ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்களை கட்சியில் உறுப்பினர்களாக இணைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இச்செயற்குழு கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் M.ஜமால்தீன், மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.முனாஃப், ஜம்பை.ரபிக், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் H.அபூபக்கர் சித்தீக், பவானி தொகுதி தலைவர் H.முஹம்மது ஜாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் ஆட்டோ.அப்துல் ரகுமான் நன்றியுரையாற்றினார். 

No comments:

Post a Comment