ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் லாரி உரிமையாளர் சங்கத்தின் 47 வது மகாசபை கூட்டம் புதுவடவள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளர் தனராஜ் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம்பேசிய போது : திம்பம் மலைப்பாதை போக்குவரத்து தடை குறித்த நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைதவுடன் விரைவில் மேல்முறையீடு செய்யபடும் எனவும், தமிழ்நாட்டில் 60கிலோமீட்டருக்கு இடையே உள்ள சுங்க சாவடிகள் அகற்றப்படும் என்ற அறிவிப்பனை நடைமுறைபடுத்திய பிறகு டிஜிட்டல் முறையிலான சுங்க கட்டன வசூலை அறிமுகப்படுத்த வேண்டுமென நிதின்கட்கரிக்கு தமிழக லாரி உரிமையாளர் சங்கத்தின் மூலம் கோரிக்கை வைப்பதாகவும், இதனால் 50 ஆயிரம் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment