குண்டாலபுரம் மாரியம்மன் கோவில் கட்டுமான பணிக்கு உதவி செய்வதாக பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி உறுதி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

குண்டாலபுரம் மாரியம்மன் கோவில் கட்டுமான பணிக்கு உதவி செய்வதாக பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி உறுதி.

ஈரோடு மாவட்டம்,  பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளவாடி  குண்டாலபுரம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையான அப்பகுதியில் அமையப்பெற்றுள்ள மாரியம்மன் கோவில் கட்டுமான பணி ஆனது நடைபெற்று வருகிறது. கோவில் கட்டுமான பணிக்கு தேவையான கட்டுமான பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள். 

அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி. பி.ஏ., நேரில் சென்று அப்பகுதி பொதுமக்களை அழைத்து கோவிலின் கட்டுமான பணிக்கு தேவையான நிதி உதவி மற்றும் பொருள் உதவியை விரைவில் செய்து தருவதாக உறுதியளித்தார். உடன் தாளவாடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.சதீஷா, தாளவாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மாதேஷா, தாளவாடி மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் சிக்கன் பாபு, பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.மாரப்பன்  மற்றும் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அஇஅதிமுக நிர்வாகிகள், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் சார்பு அமைப்பு நிர்வாகிகள் பொதுமக்கள் நிகழ்வின் போது உடன் இருந்தனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment