ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சதுமுகை ஊராட்சி, ஆலத்துக்கோம்பை காலணியில்(SBM) தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் ரூ.7.10லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைப்பதற்கு பூமி பூஜை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் போடப்பட்டது.
உடன் சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் பற்குணன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சுப்ரமணியம், சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவராஜ், வார்டு உறுப்பினர் மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் சி. ஆர்.செல்வராஜ், சேகர், ஆறுச்சாமி திருமூர்த்தி, தங்கராஜ், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment