மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 November 2022

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் அரசினர் உயர்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி  என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கட்டாயம் கல்வி பெற வேண்டும், கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

பேரணியை  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி .பி.ஏ.,   கொடி அசைத்து பேரணியை வைத்தார். இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியம், ஆசிரியர் பெருமக்களும்,   பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வி.பி.தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.பிரபாகரன், கொமரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், பவானிசாகர் சரவணன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் சத்தியமங்கலம் குமரேசன், சத்தியமங்கலம் நகர அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.டி.காமேஷ் , ராசு, மகளிர் அணியை சேர்ந்த வசந்தாமணி, சித்ரா மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பேரணியின் போது உடன் இருந்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment