ஈரோடு மாவட்டம், ஈரோடு திண்டல் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் அருகில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரி அரங்கில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23ஜோடிகளுக்கு தங்கத்தாலி உள்ளிட்ட 49 சீர்வரிசை பொருட்களுடன் திருமணத்தினை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்து பேசினார்.

உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப., ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈ.வெ.ரா., மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி , இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர்/செயல் அலுவலர் மேனகா, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வெ.செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கஸ்தூரி மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், செயல் அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment