தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் 7000 பேர் நியமிக்கப்பட்டு 7500 ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த ஐந்து மாத காலமாக அவர்களுக்கு வழங்கப்படவில்லை இது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் கல்வியில் முதல் மாநிலமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்த தமிழக முதல்வர் தமிழகத்தில் 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது அதை நிறப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கற்பித்தல் பணியை தவிர கலைநிகழ்ச்சிகள் பயிற்சி வகுப்புகள் நடத்துங்கள் என ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஆட்சியை கொடுத்து விட்டு தமிழக முதல்வர் கட்சி பணிகள் கலை நிகழ்ச்சிகள் என மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, இதனால் வாக்கு வங்கிகள் சிதரப்பட்டு வருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என செய்தியாளர் சந்திப்பின்போது பேட்டியளித்துள்ளார்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

.jpg)
No comments:
Post a Comment