தூ.நா.பாளையம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 December 2022

தூ.நா.பாளையம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம்,  தூ.நா.பாளையம் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 


இக்கூட்டத்தில், பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா ஏற்பாடு குறித்து கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், வாக்குசாவடி நிலை முகவர்கள் (BLA-2)  கூட்டம் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஒ.சுப்பிரமணியம், முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம்,  வாணிபுத்தூர் பேரூர் கழக செயலாளர் கே.எஸ்.பழனிச்சாமி , பெரிய கொடிவேரி பேரூர் கழக செயலாளர் ஏ.ஆறுமுகம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், ஓன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், திமுக நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்  மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment