ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயற்குழு கூட்டம் !!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 May 2023

ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயற்குழு கூட்டம் !!!


ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பொ .பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.குருநாதன், பவானிசாகர் தொகுதி செயலாளர் த. ராஜசேகர், கோபிசெட்டிபாளையம் தொகுதி செயலாளர் ஜி .கே. சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்:-

  1. மாவட்டத்தின் சார்பில் இந்த ஆண்டு 1000 உறுப்பினர் சேர்க்கை நிறைவு செய்து தலைமைக்கு அனுப்பி வைத்தல்.
  2. மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் பகுதியில்  விரைந்து பெயர் பலகை மற்றும் கொடியேற்று விழா செய்தல்.
  3. மாவட்டத்தின் சார்பில் இதுவரையில் ஆதித்தமிழன் அறிவு ஆயுதம் மாத இதழ் 100 பெற்றுக் கொண்டிருந்தோம் 200-ஆக அதிகப்படுத்துதல்.
  4. அனைத்து ஒன்றியங்களிலும் நிர்வாக கட்டமைப்புகளை ஒன்றிய செயற்குழு வாயிலாக நிர்வாக கட்டமைப்புகளை விரைந்து செயல்படுத்துதல்.
  5. மாவட்டத்திலுள்ள அருந்ததியர் கிராமங்களில் இன்னும் பல வடிவங்களில் தீண்டாமைகள் நடைபெறுவதை முற்றிலும் ஒழித்திட பணி செய்தல். மேற்படி தீர்மானங்கள் மாவட்டத்தின் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.


இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் இரா. வீரவேந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் நிதி செயலாளர் செ. கார்த்தி, மாவட்ட தொழிலாளர் பேரவை செயலாளர் கி. செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மா. சின்னசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் செ.வடிவேல், மாவட்ட அரசு பணியாளர் பேரவை செயலாளர் கோ. செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்புச் செயலாளர் ஈ.சித்ரா, மாவட்ட தொழிலாளர் பேரவை தலைவர் கு. முருகன், மாவட்ட தொழிலாளர் பேரவை நிதி செயலாளர் ர.ரவி, மாவட்ட தொழிலாளர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் ப. தர்மன், மாவட்டத் துணைத் தலைவர் க. பாலச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் இர. சக்திவேல், சத்தியமங்கலம் ஒன்றிய தலைவர் மா. ராஜன், சத்தியமங்கலம் ஒன்றிய அமைப்புச் செயலாளர் ரா. கொமரன், சத்தியமங்கலம் ஒன்றிய நிதி செயலாளர் நா. ராஜன், சத்தியமங்கலம் ஒன்றிய கொள்கை பரப்பு செயலாளர் வ. நாகராஜ், சத்தியமங்கலம் ஒன்றிய தொழிலாளர் பேரவை செயலாளர் சி.விஜயன், சத்தியமங்கலம் ஒன்றிய தொழிலாளர் பேரவை தலைவர் ர. மகேந்திரன், சத்தியமங்கலம் ஒன்றிய தொழிலாளர் பேரவை அமைப்பு செயலாளர் கு. செல்வன், சத்தியமங்கலம் ஒன்றிய தொழிலாளர் பேரவை கொள்கை பரப்புச் செயலாளர் ப .தேவராஜ், சத்தியமங்கலம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரா. அம்மாசை, சத்தியமங்கலம் ஒன்றிய இளைஞரணி நிதி செயலாளர் ஈ. சரவணன், சத்தியமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் சி. கார்த்தி, சத்தியமங்கலம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ம. கலைவாணி, பவானிசாகர் ஒன்றிய தலைவர் இர. நஞ்சப்பன், பவானிசாகர் ஒன்றிய அமைப்புச் செயலாளர் க. பாலன், பவானிசாகர் ஒன்றிய துணை செயலாளர் இர. ரமேஷ், பவானிசாகர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செ. மூர்த்தி, பவானிசாகர் ஒன்றிய இளைஞரணி நிதி செயலாளர் செ. ஸ்ரீதரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் கு.சேகர், நம்பியூர் அமைப்புச் செயலாளர் ப. சண்முகம், நம்பியூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் இர. தங்கமணி, நம்பியூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் பொ. பாலசுப்பிரமணியன், கோபிசெட்டிபாளையம் ஒன்றிய தலைவர் ப.மோகன்ராஜ், தூநா. பாளையம் ஒன்றிய செயலாளர் ப. சந்திரன், தூநா பாளையம் ஒன்றிய தலைவர் க. பழனிசாமி, நம்பியூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ரா. ரமேஷ், மு.சிவா, பவானி ஒன்றிய பொறுப்பாளர் ப. வீரன் ஆகியோர் கலந்துகொண்டு செயற்குழு கூட்டத்தை சிறப்பித்து கொடுத்தார்கள். 


முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொ. குமுதா நன்றியுரை ஆற்றினார். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592 

No comments:

Post a Comment