தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட உறவுகளின் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 July 2023

தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட உறவுகளின் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

 


தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட உறவுகளின் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



ஈரோடு மாவட்டம்,
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக சேலம் மாவட்ட உறவுகளின் அறிமுக விழா நிகழ்ச்சி சீலநாயக்கன்பட்டி எருமாபாளையம் சீலியம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது  அதில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அங்கு சான்றோர் பெருமக்களும் சமுதாய உறவுக்களும் சிறப்பான முறையில் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து வழியெங்கும் ஆரத்தி எடுத்து  வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரியவர்கள் சீலநாயக்கன்பட்டி  மோகனவேல் ,   சாமிநாதன்  எருமாபாளையம்  துரைசாமி ,  சீலியம்பட்டி  வெற்றிவேல்  மற்றும் பனங்காட்டு கழக நிர்வாகிகள், எருமாபாளையம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள், மற்றும் சீலியம்பட்டி பெரியோர்கள் தாய்மார்கள் ரத்த சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை சேலம் கணேஷ்   மற்றும் மாநில  மகளிர் அணி செயலாளர்  விமலா பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக எருமாபாளையம் கர்மவீரர்   காமராஜர்   சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்பு  ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. அதன் சிறப்புரையாற்றிய நிறுவனத் தலைவர் சேலம் மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் குறித்தும் உறவுகளை இணைப்பது பற்றியும் உறுப்பினர் சேர்க்கை பற்றியும் பேசினார்.இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள் ராஜேஷ்  , கவின் சங்கர் ,  எம் கே டி கோவிந்தசாமி ,  பழனிசாமி ,  தர்மபுரி தர்மலிங்க ,  ஈஸ்வரமூர்த்தி ,  விக்னேஸ்வன் ,  பொன்மணி ,  இளங்கோ ,  கிருஷ்ணகுமார் , SS சுப்பிரமணியம் , சோமு ,   ஹரி ,  கலை  , மாவட்ட  தலைவர்கள் கணேஷ் ,  ரகுபதி , ஜெயராஜ்  ஒன்றிய தலைவர்கள் ஆறுமுகம் ,  பூபதி , யுவராஜ்  மாவட்ட நிர்வாகிகள் அர்ஜுன  , நாகராஜ் ,  பெரியண்ணன்  , லட்சுமண ,  கதிர்வேல்  ஒன்றிய நிர்வாகிகள் கோவிந்தசாமி ,  வடிவேல் , ஆறுமுகம் ,  KK வலசு வடிவேல் ,ஜெகநாதன்  ,சக்திவேல் , சதீஷ் சுரேஷ் மற்றும் மகளிர் அணி  வனிதா, சித்ரா,  ரேணுகாதேவி சிந்து, விஜயா,  சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர் . விழா முடிவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.  
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment