கோபியில் நகர அமமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 July 2023

கோபியில் நகர அமமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்...


கோபியில் நகர அமமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



ஈரோடு மாவட்டம் ,  கோபிச்செட்டிப்பாளையத்தில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபி நகர கழகத்தின் சார்பாக நகர கழக செயலாளர்  பாலசுப்பிரமணியம்   தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் துளசி மணி , மாவட்ட அவை தலைவர்  அப்புசாமி ,  மாவட்ட துணை செயலாளர் தங்கவேல் , மாவட்ட இணை செயலாளர் திலகவதி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.சரவணகுமார் கலந்து கொண்டு அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் கோபி நகர அனைத்து வார்டுகளில் கொடி கம்பம் அமைப்பது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்  சுந்தர்ராஜன் , நகர கழக அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ் , நகர கழக மகளிர் அணி செயலாளர் சத்யா மற்றும் நகரக் கழக அமைப்பாளர்கள் மற்றும் நகர கழக செயலாளர்கள் வார்டு செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment