முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் நகலூர் ஶ்ரீ வாரி மஹாலில்,
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு _சென்னை ஶ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சென்னை மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய 11 ஆம் ஆண்டு சுயம் வரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து மணமக்கள் ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்
இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு ஜோடிகளுக்கும் சென்னையில் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஒவ்வொரு ஜோடிக்கும் தலா இரண்டு லட்சம் செலவில் (இரண்டு கிராம் தங்கம், இரண்டு மாதத்திற்கான மளிகை பொருட்கள், 51 வகையான சீர் வரிசைகளுடன்) இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும் என்று மாற்றுத்திறனாளி சங்கத்தின் சார்பில் தெரிவித்தார்கள்.
மாவட்ட செய்தியாளர் என் நரசிம்ம மூர்த்தி.
No comments:
Post a Comment