மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிக்கு பூமி பூஜை செய்தல் நிகழ்வு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கிளாம்பாடி பேரூராட்சி, வார்டு எண்-14, மேற்கு மலையம்பாளையத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் (2022-2023) இருந்து சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பூமி பூஜை இன்று 03.07.2023 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கிளம்பாடி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment