குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக சசிகலா அவர்களிடம் கோரிக்கை மனு:
குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் தலைமையில் சசிகலா வை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழ்நாட்டில் குன்றக்குறவரின் சமூகத்திற்கு ஏற்படும் அவல நிலைகளையும்,பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் எங்கள் தாய் குடி தமிழ் குடி குன்றக்குறவரின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் தாங்கள் பத்திரிகையின் வாயிலாக அறிக்கை விட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைபொதுச் செயலாளர் சந்திரன் மாநில பொறுப்பாளர் பன்னீர்செல்வம் திருப்பூர் மாநகர பொறுப்பாளர் கண்ணன் ஈரோடு மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் மாநகர பொறுப்பாளர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment