பவானிசாகர் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 July 2023

பவானிசாகர் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்


 பவானிசாகர் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்



தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பவானிசாகர் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் புங்கம் பள்ளி லீட்ஸ் மில் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ல் ஒன்றிய அவைத் தலைவர்   ஏ.வி.சின்ன ராஜன்  தலைமையில் நடைபெற்றது .
   இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர்  பி.ராம் ராஜ்,  மாவட்டச் செயலாளர் பெரு. நடராஜன், அமைப்பு செயலாளர் ஜோதி அருணாசலம், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி , மாவட்ட தகவல் ஆர்வலர் அணி செயலாளர் கிரி  மற்றும் மாநில இயற்கை விவசாயிகள் அணி துணை செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்  .
  மேலும் பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, பொருளாளர் என். ஞானபிரபு, சுங்கை தங்கவேல் பச்சாமல்லனூர் பாபு,  ஆர்.சரவணன்,  சி. பழனிசாமி,  பச்சாமல்லனூர்என். திருமூர்த்தி ,ரஞ்சித்குமார் மற்றும் புது ரோடு லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
      கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) பவானிசாகர் ஒன்றியத்தில் வேளாண்மை துறை மூலம் அமைக்கப்பட்ட கூட்டுப்பண்ணை விவசாய குழுக்களுக்கு அரசின் மானியத்தில் வாங்கப்பட்ட பண்ணை இயந்திரங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
2) நல்லூர் கூட்டுறவு வங்கியில் கடன் தள்ளுபடியில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) பவானிசாகர் ஒன்றியத்தில் அதிக அளவில் உறுப்னர்களை சேர்ப்பது
4) மாநில அளவில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் அதிக அளவில் கலந்துகொள்வது
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment