ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பாக முகவர்கள் கூட்டம் மற்றும் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 25 October 2023

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பாக முகவர்கள் கூட்டம் மற்றும் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்!

 




ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பாக முகவர்கள் கூட்டம் மற்றும் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம்!


ஈரோடு தெற்கு மாவட்ட அளவிலான 2024 நாடாளுமன்றத் தேர்தல் பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா அவர்கள் தலைமையில் ஈரோடு பழக்கார தெரு  ஹிதாயத் பஸ்ரியா மஹாலில்  நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது வரவேற்புரையாற்றினார். 



இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளரும், கோவை மண்டல தலைவருமான K.ராஜா உசேன், SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் ஜே.எம்.ஹசன் பாபு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் ஜம்பை.ரஃபீக், மாவட்ட பொதுசெயலாளர் மு.ஜமால்தீன், மாவட்ட செயலாளர் க.முனாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆட்டோ S.அப்துல் ரகுமான், ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ரகுமான் செயலாளர் மஸ்தான், பவானி தொகுதி தலைவர் முகமது ஜாபிர், செயலாளர் தர்வேஸ் மைதீன், ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் தளபதி.பசீர், பவானி நகர தலைவர் முஹம்மது அகீல் உள்ளிட்ட தொகுதி, நகர, வார்டு நிர்வாகிகள், பாகமுகவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள்.சபீர் அஹமது நன்றியுரை ஆற்றினார்.



செய்தியாளர்;

ச.சக்திவேல்

No comments:

Post a Comment