ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரரான திருச்சியை சேர்ந்த ராஜேஷ் ராமசாமி பல தேசிய சாதனைகளை படைத்தவர். அவர் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் வலது கால் அடிபட்டு மருத்துவரால் அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்டது. அவர் தற்போது மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் பேரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வதற்காக பாரதிய ஜனதா கட்சி, அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் திரு. பி. எல். சந்தோஷ் ஜி முன்னிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. கே. அண்ணாமலையை சென்னை டி. நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேரில் சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள தேவையான உதவிகள் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி ராஜேஷ் ராமசாமி க்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment