ஈரோட்டில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது ;
ஈரோட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி,மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஈரோடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஈரோடு மாநகராட்சி மண்டலம் 3 அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து நடத்தும் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஈரோடு ஆசிரியர் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொண்டனர் இதில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ் முன்னிலை வகித்தார், ஈரோடு மாநகராட்சி 03 ஆம் மண்டல தலைவர் சசிகுமார், 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் புனிதா சுரேஷ் குமார், 51ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, 34வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரேவதி திருநாவுக்கரசு, 45வது வார்டு பிரவீனா, 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் நந்தகோப்பு மற்றும் இன்னும் பல மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்தியாளர்;
ச.சக்திவேல்
No comments:
Post a Comment