தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி ஊராட்சி ஒன்றியம் சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா, தரைத் தள திறப்பு விழா மற்றும் 13வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 January 2024

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி ஊராட்சி ஒன்றியம் சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா, தரைத் தள திறப்பு விழா மற்றும் 13வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.


 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கோபி ஊராட்சி ஒன்றியம் சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா, தரைத் தள திறப்பு விழா மற்றும் 13வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில்  அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அந்தியூர் AG.வெங்கடாசலம், கலந்துகொண்டு   பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட தரைத்தளத்தையும் , பள்ளிக்கு நன்கொடை அளித்த நன்கொடையாளர் பெயர் பலகையை  திறந்து  வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

 


இந்நிகழ்ச்சியில் கோபி வடக்கு ஒன்றிய கழக செயலாளர்  ரவீந்திரன், சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெகதீஸ்வரன் கலைவாணி ,மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் ராஜா  , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment