தலித் விடுதலை இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 January 2024

தலித் விடுதலை இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது ;



 தலித் விடுதலை இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது ;


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டம், அந்தியூர் வட்டம், மாத்தூர் கிராமத்தில் கடந்த 1996-ம் மாத்தூர் கிராமத்தில் சர்வே எண்.559/1ல் சுமார் 250 ஏக்கர் பட்டியல் இன மக்களுக்கு வழங்கிட அரசால் முயற்சிகள் எடுக்கப்பட்டும், இன்றுவரை நிலம் வழங்கப்படாததினை கண்டித்தும், மேற்படி நிலத்தினை பட்டியலின மக்களுக்கு உடனடியாக வழங்கிடக் கோரியும் 100-க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் ச.கருப்பையா தலைமையில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் தலித் பாண்டியன், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் சசிகுமார், கருர் மாவட்ட அமைப்புச் செயலாளர் இடி மின்னல் நாச்சிமுத்து வீரன், ரவிச்சந்திரன் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.



தமிழக குரல் செய்தியாளர்; ச.சக்திவேல்

No comments:

Post a Comment