சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வார்டில் கிராமசபை கூட்டம் :
ஈரோடு மாவட்டம், சத்தி நகராட்சிக் குட்பட்ட 5வது வார்டு, 9 வது வார்டுகளில் கிராம சபை கூட்டம் சத்தி நகராட்சி தலைவரும், சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சத்தி நகராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களிடம் குறைகளை கேட்டு அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க போவதாக உறுதியளித்தார். மேலும் இந்த நிகழ்வில் சத்தி நகராட்சி வார்டு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், நகர திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ஈரோடு பூபாலன்
No comments:
Post a Comment