ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நினைவாக குத்தியாலத்தூர் ஊராட்சி கடம்பூரில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கி வாழ்த்தினார்.
போட்டியை சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் தலைமையேற்று நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கெம்ப நாயக்கன் பாளையம் பேரூர் கழக செயலாளரும், கெம்ப நாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் கே.ரவிசந்திரன், கெம்ப நாயக்கன் பாளையம் பேரூர் கழக துணை செயலாளர் ரஜினி தம்பி, மாவட்ட பிரதிநிதிகள் சி.ஆர்.செல்வராஜ், டி.கே.ரமேஷ்குமார், எஸ். ஆறுச்சாமி மாவட்ட ,ஒன்றிய,பேரூர்,கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment