பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 January 2024

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு:

 


பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு:



பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி மகளிர் பிரதிநிதிகள் மாநாடு சென்னிமலை, காங்கேயம் சாலை, அம்மன் காட்டேஜ் திருமண மஹாலில்  நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் டாக்டர் எல். கார்த்திகா  வரவேற்புரை ஆற்றிட, மகளிர் அணி மாநில பொதுச் செயலாளரும் காங்கேயம் சட்டமன்றம் அமைப்பாளருமான மோகனப்ரியா  தலைமை உரை ஆற்றிட மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய  வானதி சீனிவாசன்  மாநில மகளிர் அணி தலைவர்  உமாரதி ராஜன்  மற்றும்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டினை துவக்கி வைத்து விழா சிறப்புரை ஆற்றினார்கள்.



கொங்கு மண்டலத்தில் நடைபெற்ற முதல் மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் வரும் ஈரோடு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மகளிரணியின் சார்பில் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது, பூத் அளவில் மகளிர் அணியினரின் செயல்பாடுகள், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்துதல், பெண்கள் இளைஞர்கள் தொழில் முனைவோர் விவசாயிகள் ஆகியோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்கள், சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் கடன் திட்டங்கள் மற்றும் பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் தெரியப்படுத்துதல் மற்றும் திட்டங்கள் முழுவதுமாக மக்களை சென்றடைய வேண்டி எடுத்துரைக்கப்பட்டது.



நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்கள் கௌரிக்கப்பட்டனர். பல்வேறு கட்சிகளில் இருந்து பெண்கள் மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.



திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் திரு. மங்களம் ரவி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர்  வி.சி. வேதானந்தம், ஈரோடு பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் . என்.பி. பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பி. சாய் பூர்ணிமா அவர்களின் நன்றியுரை உடன் மாநாடு முடிவுற்றது. மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டிற்கு ஈரோடு பாராளுமன்றத்திற்கு உட்பட்ட மகளிர் அணியின் தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் பூபாலன் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment