அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஈரோடு கோவில்களில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 January 2024

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஈரோடு கோவில்களில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை:


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஈரோடு கோவில்களில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை:

அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயில் கும்பாபிஷேகம் (பிராண பிரதிஷ்டை)  நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி  பிராண பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.



அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை சிறப்பான தினமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  தலைமையில் ஈரோடு, கோட்டை பெருமாள் கோவிலில் "ஸ்ரீ ராம ஜெயம்" பஜனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பெரியார் நகர், மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். ராமர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு மூலம் திரையில் அனைவருக்கும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இனிப்புடன் கூடிய உணவினை வழங்கினார். நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



 தமிழக குரல் இணையதள செய்தியாளர் ஈரோடு பூபாலன்..

No comments:

Post a Comment