ஈரோடு மாவட்டம் , கோபி ஒன்றியம் , புதுவள்ளியம்பாளையம் ஒன்றிய நிர்வாகி கார்த்திக், சுதர்சனி புதுமனை புகுவிழாவில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக ஹாலில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி , மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கலைவாணன் , ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் , திருப்பூர் வடக்கு மாவட்ட பொருளாளர் பாலு , மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல் , மாவட்ட நிர்வாகி நாகர்பாளையம் அருள் , கோபி நகரம் மணிகண்டன் , நம்பியூர் சதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment