எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை - மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 January 2024

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை - மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

 


எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை - மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!



சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா வரவேற்புரையாற்றினார்.


கூட்டத்தில் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாடு மீளாய்வு மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி சம்பந்தமாக  ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில்


கடந்த ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உழைத்த மாவட்ட, தொகுதி, நகர, வார்டு நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொண்ட, ஆதரவளித்த அனைவருக்கும் மாவட்ட செயற்குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.


ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒரு பகுதியாக ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர்கள் மற்றும் செயல்வீரர்களை கட்சியில் இணைப்பது என தீர்மானிக்கப்பட்டது.



இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் மு.ஜமால்தீன், மாவட்ட செயலாளர் அ.சாகுல் ஹமீது, பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் M.சபீர் அஹமது, ஈரோடு மேற்கு தொகுதி செயலாளர் K.மஸ்தான், பவானி தொகுதி தலைவர் H.முஹமது ஜாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட மாவட்ட செயலாளர் க.முனாப் நன்றியுரையாற்றினார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் பூபாலன் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment