ஸ்டாலின் பிறந்தநாள் விழாவிற்கு முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினார் அமைச்சர்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக ஈரோடு மாநகரம் 60வது வார்டில் கழக கொடி ஏற்றி அட்சயம் டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கழக மாநில, மாவட்ட, மாநகர, வட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்மாநகர செயலாளர் மு. சுப்பிரமணியம், மற்றும் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியை ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால் ஈரோடு
No comments:
Post a Comment